முத்தரசநல்லூர் (Mutharasanallur) திருச்சி:வரலாறு

முத்தரசநல்லூர் (Mutharasanallur) திருச்சி மாநகரத்திற்கு மேற்கே 7 கி.மீ தொலைவில் காவிரி ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு

மிக்க ஓர் கிராமம் ஆகும். பண்டைய மக்களின் வாழ்க்கை குறிப்புகள் உள்ள
பழைமையான கல்வெட்டுக்களை கொண்ட கோவில்கள் இங்கு காணப்படுகிறன. இக்கல்வெட்டுக்கள் இந்திய தொல்பொருள் துறையினரால் பாதுகாக்கப்பட்டு
வருகிறன.


வரலாறு

முன்னர் இப்பகுதியை அண்டி ஆட்சி செய்ததாக கூறப்படும் முத்தரசன் என்ற

குறுநில மன்னனின் பெயராலேயே இந்த ஊர் முத்தரசநல்லூர் என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஊர் மிக பழமையான கிராமம். இங்குள்ள தொடருந்து நிலையம் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த புகைவண்டி நிலையம்,

திருச்சி - கரூர் தடத்தில் மூன்றாவது நிலையமாகும்.

(பாலக்கரை, கோட்டை, முத்தரசநல்லூர்). அருகே உள்ள சிற்றூர்கள்

ஜீயபுரம், அல்லூர், பழூர், கூடலூர், முருங்கப்பேட்டை,

கம்பரசம்பேட்டை ஆகியவை.

[தொகு]முன்னாள் ஊராட்சி தலைவர்கள்

  • திரு. அ. மருதநாயகம்
  • திரு. சீனிவாசன்
  • திரு. சீ. இராஜசேகரன்
  • திரு. என். காமராஜ்


தற்போதைய ஊராட்சி தலைவர்

  • திருமதி. லலிதா காமராஜ்


அரசியல்

அரசியல் பிரிவுகளில், இந்த கிராமம் ஓர் ஊராட்சி.

அந்தநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது. ஸ்ரீரங்கம் வட்டத்தின்

ஒரு பதியாக விளங்குகிறது.


மக்கள்

சுமார் 10,000க்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வசிக்கின்றனர்.

இவர்களின் முக்கிய தொழில் விவசாயம்.

நெல், கரும்பு, வாழை, எள், உளுந்துஆகியன முக்கிய பயிர்களாகும்.


விழாக்கள்


மாரியம்மன் திருவிழா

சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் ஒன்றாக இணைந்து, வரி வசூலித்து

7 நாட்கள் திருவிழா அம்மனுக்கு நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்த

திருவிழாக்களின் வரவு செலவு கணக்குகள் 60 ஆண்டுகளுக்கும் மேலாக

பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடக்தக்கது. மேலும் இந்த

திருவிழாவின் முடிவில் பெளர்ணமி வெளிச்சத்தில், காவிரி ஆற்றின்

மணலில் சுமார் 25 ஆயிரம் பேர்களுக்கு அன்னதானம் வழக்கப்படுகிறது.


மதுரகாளியம்மன் திருவிழா

இந்த திருவிழா, 1 வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதத்தில்

நடைபெறுகிறது. பாம்பு ஆட்டம், மஞ்சள் நீர் விளையாட்டு பொன்றவை

இவ்விழாவின் சிறப்பு.



புள்ளியியல் குறிப்புகள்

  • வட்டம்: ஸ்ரீரங்கம்
  • ஒன்றியம்: அந்தநல்லூர்
  • பரப்பளவு: ____ ச.கி.மீ
  • நன்செய் நிலம்: ____ ஏக்கர்
  • புன்செய் நிலம்: ____ ஏக்கர்
  • மக்கள் தொகை: சுமார் 10 ஆயிரம்
  • முக்கிய தொழில்: விவசாயம்
  • சாகுபடி பயிர்கள்: நெல், கரும்பு, வாழை, உளுந்து, எள்
  • துவக்கப் பள்ளிகள்: 2
  • நடுநிலைப் பள்ளிகள்: 1 (ஆதாரம்: http://www.schools.tn.nic.in அரசு வலைத்தளம்)

0 comments: